திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) மாநில மாநாடு திமுக கட்சியினரிடையே பெரும் உற்சாகம் நிலவி வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர், இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின். “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கத்துடன், தமிழகத்தின் அரசியல் களத்தில் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது,

இந்த மாநாட்டில் பங்கு பெறுவதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் சால்வை கொடுத்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.
