திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜூலியஸ் சாந்தகுமார் வயது(45).குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் இன்று மாலை சுண்ணாம்பு கருப்பட்டி என்ற இடத்தில் மது குடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தார் மேலும் அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி கத்தியால் தனது உடலில் கீறிக்கொண்டு ரத்தம் வழிய வழிய சாலையில் சுற்றித் திரிந்தார். இதனை கண்ட பொதுமக்கள் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்குதகவல்தெரிவித்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போதை ஆசாமி ஜூலியஸ் சாந்தகுமார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சோமரசம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகை வந்தார். போலீசை பார்த்ததும் கையில் வைத்திருந்த கத்தியுடன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனைக்கண்ட எஸ்ஐ கார்த்திக் போதை ஆசாமியை விரட்டி சென்று பிடித்தபோது, போதை ஆசாமி தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் எஸ்.ஐ கார்த்திகை குத்தினார். இதில் நிலைகுலைந்து சாலையில் சரிந்து விழுந்தார். மேலும் போதை ஆசாமி ஜூலியஸ் சாந்தகுமாரும் சாலையில் மயங்கி விழுந்தார். இதனை கண்ட பொதுமக்கள் கத்தி குத்தில் படுகாயமடைந்த எஸ்.ஐ மற்றும் போதை ஆசாமி ஆகிய இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினர் போதை ஆசாமி ஜூலியஸ் நந்தகுமார் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *