அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 62 வது அமைப்பு தினத்தையொட்டி, AIYF திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் பெருமன்ற கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமையில் இன்று காலை திருச்சி பெரியமிளகுபாறை மாணிக்கம் இல்லத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பெருமன்ற கொடியினை AIYF முன்னாள் மாவட்ட தலைவர் சிவா ஏற்றி வைத்தார்.

2021ம் ஆண்டிற்கான உறுப்பினர் அட்டையை AITUC திருச்சி மாவட்டபொதுச்செயலாளர் சுரேஷ் அவர்கள் புதிய உறுப்பினர்களக்கு வழங்கி துவங்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்வில் மாணவர் பெருமன்ற மாநில துணை செயலாளர் தினேஷ் குமார், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் இப்ராஹிம், AIYF மாவட்ட குழு உறுப்பினர் களான கௌதம், நல்லுசாமி, அசோக்,தாஸ்,மற்றும் போக்குவரத்து அன்பழகன் , குணா ஆகியோர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *