திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை சார்பில் திருச்சி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு கோடை காலத்தில் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கவும், சாலையில் உள்ள தூசிகள் மற்றும் வாகனத்தில் இருந்து வரும் புகை ஆகியவற்றிலிருந்து கண்களை பாதுகாக்கும் வகையில் கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு டாக்டர். அகர்வால் கண் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் தலைமை தாங்கி திருச்சி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் நிக்சன் பாபு ஆகியோர் உட்பட்ட 350-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு கூலிங் கிளாஸ்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி, லூமேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *