திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்து பின்னர் மருத்துவமனை டீன் வனிதா,திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்ரமணியன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210509_122025.jpg)
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 794 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 766 படுக்கைகள் முழுவதும் நிரப்பட்டுள்ளது.
நோயாளிகள் எண்ணிக்கை பொறுத்து படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும்,
ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 157 உள்ளது.அதை அதிகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
![](https://tamilmuzhakkam.com/wp-content/uploads/2021/05/IMG_20210509_122102-1024x685.jpg)
மாவட்டத்தில் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.ரெம்டெசிவர் மருந்தும் அரசு சார்பில் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவில் தரம் இல்லை என நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். அது குறித்து டீன் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.நோயாளிகளுக்கு எந்த வித அசெளவல்கரியம் ஏற்படாத வகையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.