திருச்சியில் கடந்த 1919 முதல் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது திருச்சபையின் கீழ் 200 பள்ளிக் கூடங்கள், ஒரு கல்லூரி, 40 சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயராக பணியாற்றுபவர்கள் அறுபத்து ஐந்து வயதில் பணி ஓய்வு வழங்கப்படும். அப்படி ஆயராக இருந்து ஓய்வுபெற்ற டானியல் ஜெபராஜ் மீது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பணத்தை வாங்கிக்கொண்டு நிரப்பியது தொடர்பான மற்றும் பல்வேறு ஊழல்களை விசாரிக்க 5பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக சர்ச் கமிட்டி செயலாளர் மெகர்ஆண்டனி தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செயலாளர் மெகர் அந்தோணி கூறுகையில்:-

 ஆயர் ஜெபராஜ் பணிஓய்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையில் அவர் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு பதவியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். அதற்கெதிராக நிர்வாக குழு நீதிமன்றம் சென்ற நிலையில் பதவி நீட்டிக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்து, மீண்டும் அதே நிர்வாகக்குழு செயல்பட அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது அவர் மீது ஆலயத்தின் இடங்களை குத்தகை மற்றும் விற்பது தொடர்பான ஊழல்கள் உள்ளது. மேலும் தரங்கை வாசத்தின் கீழ் செயல்படும் 35 பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலகப் பணி இடங்களில் பணத்தை வாங்கிக்கொண்டு பணி வழங்கியது தொடர்பான ஊழல்கள் தெரியவருகிறது. மேலும் தரங்கை வாசத்திற்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு விட்ட வகையில் ரூபாய் 200 கோடி ஊழல் நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் 9 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பது தெரியவருகிறது. எனவே இது தொடர்பான விசாரணை மேற்கொள்ள 5பேர் கொண்ட குழுவை நிர்வாக குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள். மேலும் புதிய ஆயர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் வருகிற 27, 28ம் தேதி முதற்கட்ட தேர்தலும், 30-ஆம் தேதி இரண்டாவது கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. இதில் முதல்கட்ட தேர்தலில் ஆணையர் மற்றும் ஆயர் அல்லாத பணிகளில் உள்ளவர்கள் 240 பேர் வாக்களிக்க உள்ளனர். மேலும் இரண்டாவது கட்ட தேர்தலில் 125 ஆயர்கள் மற்றும் ஆயர் அல்லாத வேறு பணியில் உள்ளார் 400 பேர் என மொத்தம் 575 பேர் வாக்களிக்க உள்ளனர். இதன் முடிவு 31தேதி மாலை தெரிவிக்கப்பட்டு புதிய ஆயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது ஆலோசனைக்குழு உறுப்பினர்களான வில்பர்ட் டேனியல், ஆல்பர்ட் சுந்தர்ராஜ், எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *