தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மூலமாக கொரானோ தொற்று நோய் பாதித்து இறந்தவர்களை உடல்களை அவர்களின் மத சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்து வருகின்றனர். அதனை பாராட்டியும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு மற்றும் அவசரகால ரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்த தானம் வழங்கும் வகையில் முகாமில் 153 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களை பாராட்டிநகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் அனைத்து சமுதாய மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆம்புலன்சை சேவையை துவங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் மண்டிசேகர், போட்டோ கமால்தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், பொருளாளர் முகமது உசேன்,மாவட்ட பொருளாளர் முகமது ரபிக்,மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.