திருச்சி அரசு மருத்துமனையில் ரோட்டரி கிளப் சார்பாக ரூபாய் 1.2 கோடி மதிப்பிலான100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் .மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, அப்துல் சமத், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன்,ரோட்டரி இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப் ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் ரோட்டரி மாவட்ட கவர்னர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு டீன் வனிதா கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் நிலை குறித்தும் சிகிச்சை முறை குறித்தும் அரசியல்வாதிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் அடவடியாக கேள்வி கேட்கக் கூடாது ஏதேனும் விபரம் கேட்பதாக இருந்தால் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்டு அறிய வேண்டும் அவ்வாறின்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் அடாவடியாக கேள்வி கேட்கும் அரசியல்வாதிகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *