திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காஜாதோப்பைச் சேர்ந்த 74 வயதுடைய நசீமா இவரது கணவர் அப்துல்மாலிக் இறந்த விட்டார். இந்நிலையில் கடந்த 02.06.2021 அன்று மூதாட்டி வீட்டைப்பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இவரது வீட்டின் ஜன்னலை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 15 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்து.

இது தொடர்பாக மூதாட்டி தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்த இரண்டே நாட்களில் வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7,14,000/- பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆஸ்ரேலியன் டாலர் A$.8150/- (இந்திய மதிப்பில் சுமார் ஐந்து லட்சம்) பணம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மூதாட்டி வீட்டில் கொள்யைடிக்கப்பட்ட பணம் இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 12 இலட்சம் மதிப்பிலான பணத்தை நீதிமன்ற உத்தரவுப்பெற்று மூதாட்டியை அழைத்து அவரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி கொடுத்த புகார் மனுவைப் பெற்று அதிரடியாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்தும், சட்டப்படியான நடிவடிக்கை எடுத்தும் மூதாட்டியிடம் பணத்தை ஒப்படைத்த தனிப்படையினர் மற்றும் தில்லைநகர் காவல் நிலைய காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *