அருந்தமிழர் ஒன்றுகூடல் கூட்டமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்டத் தலைவர் அமுதவேந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அருந்தியர் மக்களின் உரிமைகளை பெறுவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது…

எங்கள் உரிமைகளை வென்றெடுக்கவே அருந்தமிழர் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளோம், அருந்தமிழர் கூட்டமைப்பு என்பது அருந்தியர்களை ஒன்றிணைக்கும் கூட்டமாகும், இதன் மூலம் அருந்தியர் மக்களை ஒருங்கிணைத்து அரசிடம் இருந்து கிடைக்கும் பல நல்ல திட்டங்களை அருந்தியர் மக்களுக்கு பெற்று தர வேண்டி இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம், கலைஞர் அவர்கள் அறிவித்த 3%சதவீத உள் ஒதுக்கீட்டை பயன்படுத்தி எங்கள் சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் நல்ல நிலையில் உள்ளார்கள் அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,

அதேபோல் அருந்ததியர் இளைஞர் ஒருவருக்கு திமுக இளைஞரணி துணைச் செயலாளராக ஆனந்தகுமார் என்பவருக்கு பதவி வழங்கியதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அருந்தியர் மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகளைப் பெற்றுத் தர இந்த கூட்டமைப்பு தொடர்ந்து போராடும் என தெரிவித்துக் கொண்டார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *