துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில், தமிழகத்தின் சார்பில் திருச்சியைச் சேர்ந்த வனத்துறை டிரைவர் மணிமாறன், நெல்லையைச் சேர்ந்த வனத்துறை ஊழியர் உலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் மணிமாறன் குவார்ட் பிரிவில் 250 கிலோ வலுதுாக்கி தங்கம் வென்றார். மேலும் பெஞ்ச் பிராஸ் பிரிவில் 117.5 கிலோ வலுதுாக்கி வெள்ளி, டெட்லிப்ட் பிரிவில் 202.5 கிலோ வலுதுாக்கி வெள்ளி பதக்கங்களை வென்றார். அந்த வகையில் மொத்தமாக 570 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். ஆசிய வலுதுாக்கும் போட்டியில் 2 தங்கம் மற்றும் 2 வெள்ளி வென்று தாயகம் திரும்பியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேஜஸ் விரைவு ரெயில் மூலம் வீரர் மணிமாறன் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் வந்தடைந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் வீரசேகரன், செயலாளர் லோகநாதன், பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்