திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலைத் தடுத்திடும் வகையிலும், தற்போது பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாகவும் மக்கள் அனைவரும் புத்தாண்டு மற்றும் பண்டிகை காலங்களில் வழிபாட்டுத் தலங்கள், காவிரிக் கரையோரங்களில் மற்றும் பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்த்திடுமாறும், தனிமனித இடைவெளியினைப் பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் சமூக பரவலைக் கட்டுப்படுத்திட பெரும்பங்காற்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வணிக நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு அணியாதவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *