தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரசாந்த் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு, சமூக வலைத்தளம் மூலம் இளம் பெண் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். தனது ஆன்லைன் காதலியை பார்க்கும் ஆசையில் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு முன்பே பாகிஸ்தான் போலீசார் அவரை பார்த்துவிட்டனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் வாலிபர் பிரசாந்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கடந்த மூன்றரை வருடங்களாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவரை விடுவித்த பாகிஸ்தான் அரசு, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.முன்னதாக, பிரசாந்தின் தந்தை பாபுராவ், தெலங்கானா மாநிலம், சைபராபாத் காவல் ஆணையரிடம் தனது மகனை விடுவிக்க உதவுமாறு கோரியிருந்தார். மேலும் இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்திற்கும் அவர் கொண்டு சென்றார்.இந்நிலையில், குடும்பத்தாரின் தொடர்ச்சியான முயற்சிகளால், பிரசாந்த் வீடு திரும்ப உள்ளார். இதனால் மகிழ்ச்சியில் உள்ள குடும்பத்தினர், அவரை வரவேற்க தயாராகி வருகின்றனர். பிரசாந்த், விடுதலைக்கு முயற்சி செய்த அனைத்து தரப்பினருக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *