2022-ம் ஆண்டு ஜனவரி 01-ம் தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி ஆலயங்கள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டை யொட்டி திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா திருத்தலத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் .

திருச்சி ஜங்ஷன் வழிவிடுவேல்முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை யொட்டி நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டை யொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவிலில் நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை நடைபெற உள்ள ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று காலை ஆஞ்சநேயருக்கு பத்தாயிரத்து எட்டு ஜாங்கிரி மாலை சாற்றும் வைபவம் நடைபெற்றது. இன்று புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே சென்று வழிபட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்