தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 5-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதால், இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்திலும், சட்டமன்ற உறுப்பினர் விடுதியிலும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால்தான், சட்டபேரவை மண்டபத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *