திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உலகப் புகழ் பெற்ற கோவிலாகும்., இங்கு‌ மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

அதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பேருந்து வசதிகள் அதிகமாக இருந்தாலும் இதில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே ஆதி மாரியம்மன் கோவில் வழியாக செல்கிறது. இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாகும் பொழுது பேருந்துகள் செல்வதற்கும் பொதுமக்கள் அவ்வழியே கடந்து செல்வதற்கும் பள்ளிப் பேருந்துகள் வாகனங்கள் அவ்வழியே செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது.

 மின்கம்பங்களை ஒட்டி தகரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடை

இதற்கு கோவில் முன்பாக சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள் முக்கிய காரணமாக உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர். அதனைப் பொருட்படுத்தாமல் அந்த இடங்களில் கடைகள் அமைக்கப்பட்டு வாடகைகள் வசூல் செய்யப்படுகிறது எனவும் இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்பு களில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அவ்வழியே பள்ளி வாகனங்கள் பேருந்துகள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது எனவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இனாம் சமயபுரம் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *