14 வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு விரைவாக பேசி முடித்திட வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மத்திய சங்க துணைத்தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் நேருதுரை பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்.

வரவுக்கும் செலவுக்கும் ஆன வித்தியாசத் தொகையை தமிழக அரசு ஏற்க வேண்டும் பராமரிப்பு ஊழியர்களின் இன்சென்டிவ் தொகை குறைந்துள்ளது குறைந்தபட்ச தினசரி 50 ரூபாய் என உயர்த்த வேண்டும் மகளிர் இலவச பயணத்திற்கான டேட்டாவை ஓட்டுநர் நடத்துனர் நிலையான வட்டியுடன் உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் நன்றி உரையாற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *