குடியாத்தம் அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது விற்பனைக்காக சாராயம் எடுத்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு பகுதியில் ஊரடங்கு விதிகளை மதிக்காமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில் அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 60 லிட்டர் சாராயம் பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி குடியாத்தம் பகுதியில் விற்பனைக்காக எடுத்து வந்த குடியாத்தம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த வடிவேலு (வயது 42) சீனிவாசன் (வயது 57) இருவரையும் கைது செய்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.