நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாடு வரும் பிப்ரவரி 15ஆம் தேதி பாபநாசம் அருகே சிவந்திபுரம் காமராஜர் மஹாலில் நடைபெற உள்ளது இந்த மாநாடு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் பாபநாசத்தில் நெல்லை மண்டல பேராயர் தலைவர் பிஷப் சாமுவேல் ராஜ்குமார் தலைமையிலும் பாஸ்டர் டேனியல் ராஜா முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி ஐசிஎப் பேராயத் தலைவர் ஜான் ராஜ்குமார் கலந்துகொண்டு கலந்தாய்வுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பாஸ்டர் பிரேம்குமார் அகஸ்தியப்பட்டி அம்பாசமுத்திரம் அலெக்ஸ் சுந்தர்ராஜ் மற்றும் நெல்லை மற்றும் தென்காசி மண்டல போதகர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநாடு குறித்து ஆயத்தப் பணிகள் அழைப்பிதழ் விநியோகித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்த மாதம் 15 ஆம் தேதி நடைபெறும் நெல்லை மண்டல கிறிஸ்தவ போதகர் மாநாட்டில் தமிழ்நாடு மாநில பேராயர் கவுன்சில் தலைவர் மார்ட்டின் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் மாநில சட்ட ஆலோசகர் வக்கீல் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கின்றனர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *