தமிழகத்தில் கொரோனோ பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நோய் தொற்றை கட்டுப்பட்டுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநிலத்தில் இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே தேவை இல்லாமல் வெளியே வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீஸ் துணை கமிஷனர் வேதரத்தினம் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் தேவையில்லாத காரணங்களுக்காக ஊர் சுற்றிய இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் சிலரை எச்சரித்து அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *