திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தினக்கூலி 557 ஆக வழங்கிட கோரி துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க ஊர்வலமாக வந்து மனு கொடுக்கும் போராட்டத்தை இன்று நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு CITU மாநகர மாவட்ட செயலார் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். CITU மாநகர மாவட்ட தோழர் மாறன் முன்னிலை வகித்தார். முன்னதாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக திருச்சி மாநகராட்சி சுய உதவி குழு தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் தீர்மானிக்கப்பட்ட தினக்கூலி 557யை பெற்று வந்த நிலையில் தற்போது 461ஆக குறைத்து வழங்கியதை கண்டித்தும்,

திருச்சி மாநகராட்சி தூய்மை பணியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடும் முடிவை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் ஊர்வலமாக வந்து சிஐடியு துப்புரவு தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *