சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் திருச்சி கரூர் மண்டலங்கள் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு போக்குவரத்து திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர்கள் CITU சங்க திருச்சி மண்டல தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி மண்டல பொது செயலாளர் கருணாநிதி, CITU மாநகர மாவட்ட செயலார் ரெங்கராஜன், மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் மற்றும் கரூர் மண்டல துணை பொது செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறுதிப்படுத்தக் கோரியும்,

அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த கோரியும், பத்து ஆண்டுகள் தொடரும் வஞ்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திட கோரியும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்கள் டிஏ உயர்வு மருத்துவ காப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் இன்று குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்