மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கருமண்டபம் 45வது வட்ட திமுக சார்பில் வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஏற்பாட்டின் பேரில் அப்பகுதியை சேர்ந்த 1500 ஏழை-எளிய பொதுமக்களுக்கு சத்தான கீரை, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்பினை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன். துறையூர் ஸ்டாலின்குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி மாநகரச் செயலாளர் அன்பழகன் பகுதி செயலாளர் மோகன்தாஸ்,கிராப்பட்டி முத்துச்செல்வம்தில்லை மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *