மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் சவுண். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஆருஷ்(13), அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர். காலையில் அவரது பெற்றோர் எழுந்து பார்த்தபோது வீட்டில் படுத்திருந்த ஆருஷ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த பகுதியில் தேடி பார்த்தபோது சி பிளாக்கின் முதல் தளத்தில் உள்ள பால்கனியின் மீது ஆருஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆரூசை மீட்ட போது அவர் இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆருஷ் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதனால் நேற்று இரவு சாப்பிட்டு தூங்கி விட்டு தனது வீட்டில் இருந்து கிளம்பி சி பிளாக் வழியாக வந்தவர் அங்கிருந்த ஜன்னல் ஓரத்தில் கதவு திறந்திருந்தால் அதன் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தற்கொலைக்கு முன்பாக கடிதம் எழுதி வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த கடிதத்தில், “இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. தனக்கு மன அழுத்தம் தாங்க முடியவில்லை, தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை, அம்மா உனது உடலை நன்றாக பார்த்துக்கொள், அப்பா நீங்கள் இதுபோல் எப்பொழுதும் காமெடியாக பேச வேண்டும். அண்ணா! என்னை மன்னித்துவிடு” எழுதி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *