திருச்சி லால்குடி டான் போஸ்கோ சர்ச் எதிரே உள்ள அரிசி கடை வாசலில் ஒரு பிணம் கிடப்பதாக லால்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் லால்குடி மணக்கால் பகுதி காமராஜர் நகரைச் சேர்ந்த பஞ்சு என்பவரின் மகன் சுரேஷ்(35) என்பது தெரியவந்தது. அவர் தலையில் கட்டையால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது,

உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர் மேலும் அவரை கட்டையால் அடித்து கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *