கடந்த 2017 ம் ஆண்டு வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களை எல்.ஐ.சி. ஊழியர்கள் என தொலைபேசி மூலம் பேசி அறிமுகம் செய்துகொண்டு திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த அம்துல்கனி பாட்சா ( எ ) APL பர்வீன் கனி என்பவரிடம் அவரது எல்.ஐ.சி பாலிசி முதிர்வடைந்துவிட்டதாகவும் அதனை மத்திய அரசின் சில திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனப்பேசி அதற்காக பல்வேறு தவணைகளாக ரூ . 86,36,963 / – வரை ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யச்சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர் . இது சம்மந்தமான வழக்கு திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி புலன் விசாரணைக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் புலன் விசாரணை செய்து வந்தனர் . இந்நிலையில் பெரம்பலூர் சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையில் சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் லட்சுமி , சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் , தலைமைக் காவலர் சந்திரசேகரன் , ஆனந்த் பாபு ஆகியோர் டெல்லி சென்று முகாமிட்டு இவ்வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான அபினேஷ்குமார்சிங் ( எ ) அமன் , வயது 26 என்பவரை கடந்த 29.07.2021 ம் தேதி கைது செய்து உரிய முறைகளைப் பின்பற்றி 01.08.2021 ம் தேதி திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *