கிறித்தவ கத்தோலிக்க சபையினர் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கின்ற ஒரு சிறப்பு வழிபாடு. இதனைக் கல்லறைத் திருநாள் எனவும் புனித ஆத்துமாக்கள் தினம் எனும் அழைக்கின்றனர். கத்தோலிக்க திருச்சபையினர் நிகழ்வை வருடம்தோறும் நவம்பர் மாதம் 2ம் நாள் கொண்டாடுகின்றனர். இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்காக அவர்களுக்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் தூய்மை பெறும் நிலைபற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும்.

அதன்படி இன்று திருச்சி வேர் ஹவுஸ் கல்லறையில் மரித்த முன்னோர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும்  “உத்தரிக்கிற ஸ்தலம்” அல்லது “உத்தரிப்பு ஸ்தலம்” என்று அழைப்பது வழக்கம் இறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர்.

இந்நிகழ்வில் கல்லறைகள் மலர்களாலும் மெழுகுதிரிகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன. கல்லறைத் தோட்டங்களில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு பின்னர் கல்லறைகள் மந்திரிக்கப்படுகின்றன. இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநில இருந்தும் தங்கள் முன்னோர்கள், உறவினர்கள் கல்லறைக்கு வழிபாடு செய்ய வருகை தந்து தங்களது முன்னோரின் கல்லறையை அலங்கரித்து ரோஜா மற்றும் பூக்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி ஊதுபத்தி ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *