கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில், திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகர் பகுதியில் உள்ள ராஜா முகமது என்பவரது மகன் அப்துல் முத்தலிப் (32) என்பவரின் வீட்டில் ஏர்போர்ட் காவல் ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றதாகவும், என்ஐஏ அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படியே இந்த சோதனை நடைபெற்றதாகவும் தகவல் தெரிய வருகிறது.தற்போது கோவை குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *