திருச்சி அரியமங்கலம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இதே வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் விடுதியில் 2-செல்போன்கள் திருடு போனது குறித்து விடுதி வார்டன் சிவராமிடம் மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். இது குறித்து வார்டன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவரான அரியலூர் மாவட்டம் செந்துறை சேர்ந்த சிபு ஆபிரகாம் என்பவர் திருடியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிந்து சிபு ஆபிரகாமிடம் இருந்து 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *