திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவர்கள் இன்று மாலை 7 மணிக்கு உற்சவ மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 7.30 மணியளவில் கார்த்திகை கோபுரம் அருகே உள்ள நாலுகால் மண்டபத்திற்கு வந்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் காட்சியளித்தனர்.

சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் காட்சி அளித்தார்.

 

அதற்கு முன்னதாக விநாயகரும், முருகனும், சண்டிகேஸ்வரரும் வந்தனர். இதையடுத்து கார்த்திகை கோபுரத்திற்கும், நாலுகால் மண்டபத்திற்கும் நடுவே பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதனை சுவாமிகள் கண்டருளினர்.

பின்னர் சுவாமி, அம்பாள் உள்பட பஞ்சமூர்த்திகள் 4-ம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து மேல வாசல் வழியாக அம்மன் சன்னதிக்கு வந்தடைந்தனர். அங்கு கொளுத்தப்பட்ட சொக்கப்பனையை சுவாமி, அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் கண்டருளினர். பின்னர் தெற்கு வாசல் வழியாக சங்கமேஸ்வரர் சன்னதிக்கு வந்தனர்.

அங்கு சொக்கப்பனையை கண்டருளிய பின் வீதி உலா வந்து மேலவாசல் வழியாக கோவில் உள்ளே சென்று உற்சவ மண்டபத்தை அடைந்தனர். கார்த்திகை தீப திருநாளையொட்டி இன்று கோவிலில் 3 இடங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்