மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி தாராநல்லூர் கல்மந்தை காலனி குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தில்கட்டப்பட்ட வீடுகள் தரமற்றதாக உள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும் .உரிய விசாரணை நடத்த வேண்டும்’ ஏற்கனவே குடி இருந்த பயனாளிகளுக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் இன்று நடந்தது.

 

இந்த போராட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜி. கே.ராமர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா | மாவட்ட செயற்குழு ஜெயபால், பகுதிக்குழு ரமேஷ், இளையராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களோடு இணைந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த குடியேறும் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்