முசிறி அருகே குடிநீர் வசதி செய்து தராத ஊராட்சி தலைவரை கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவில் அமைந்துள்ள திருத்தலையூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் தங்கையன் என்பவரிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பொதுமக்கள் காலி குடங்களுடன் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால் ஆகிய வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். பொது மக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒன்றிய அலுவலர்கள் பொதுமக்களிடம் போலீஸார் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *