திருச்சி மத்திய சிறையில் காவலர்கள் 15 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அதில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.ஆனால் 5 பேர் மட்டும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் தங்கி அரசு மருத்துவமனை உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாராயணசுவாமி (34) என்பவர் திருச்சி மத்திய சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

கடந்த 25ஆம் தேதி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறை காவலர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.சிறைக் காவலரின் உயிரிழப்பு மத்திய சிறை காவலர்கள் இடையே பயத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *