தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்தமாதம் முதல் தவணையாக மக்களுக்கு வீடு வீடாக டோக்கன் விநியோகித்து, நிவாரண தொகை அளிக்கப்பட்டது. முதல் தவணை ரூ.2000 விடுப்பட்டவர்களுக்கு தற்போது ரேஷன் கடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா நிவாரணா நிதியின் 2வது தவணை ஜூன் 3ல் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கிவைக்கிறார். மேலும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் ஜூன் 3 ஆம் தேதி துவங்கிவைக்கவுள்ளார். மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் ஜூன் 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *