திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , கரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பத்திரப்பதிவு துறையில் பணி புரியும் சில சார் பதிவாளர்கள் மீது பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தனர்.இதில் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மனைகளை சட்டத்திற்குப் புறம்பாக பத்திர பதிவு செய்ததாகவும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட அங்கீகாரம் இல்லாத மனைகள் பதிவு செய்த புகாரில் திருச்சி மண்டலத்தில் 11 சார்பதிவாளர்கள், 6 உதவியாளர்கள் என 17 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஒரே நாளில் பத்திரப் பதிவுத் துறையில் 17 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருச்சி மலைக்கோட்டை சார்பதிவாளர் பணி மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், ஆவண எழுத்தர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வெடி வெடித்தும் கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்