திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார்கள். அவர்களது குறைகளை கேட்ட மாநகர போலீஸ் கமிஷனர் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கடந்த19.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் மற்றும் சிறப்பு முகாம் வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், திருச்சி மாநகர காவல் – பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் – SRM மருத்துவ கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொதுநலம்,எழும்பியல்,தோல், இதயம்,வயிறு,காது, மூக்குமற்றும் தொண்டை பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,மருந்துகள் வழங்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில்,கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்காக,காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் (Police Boys & Girls Club) இன்று 22.07.2021 திருச்சி மாநகர துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சக்திவேல் தலைமையேற்று துவக்கி வைத்தார். மேலும் ஜமால் முகமது கல்லூரி நிர்வாக இயக்குநர் அப்துல் காதர் நிஹால்,Pearl Drust நிர்வாக இயக்குநர் முனைவர். இராமச்சந்திரன், கண்டோன்மெண்ட சரக காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு),காவல் ஆய்வாளர்கள்,காவல் ஆளிநர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் 150 சிறுவர் மற்றும் சிறுமியர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.இம்மன்றத்தில் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பல்வேறு விளையாட்டு பொருட்கள் ஆகியவை அவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்ச்சியானது சமூக இடைவெளி மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் இந்த காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றமானது தங்களது குழந்தைகளுக்கு நல்வழிகாட்டும் வகையிலும், சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *