திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்காட்டுப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் இவர் தனது மகள் துர்கா 17 வயது காணவில்லை என துறையூர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் துர்கா பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து அவரை கண்டுபிடித்தனர் பின்னர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்தபோது சுமார் ஒன்றரை வருடமாக பேஸ்புக் மட்டும் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பில் இருந்த திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருடன் திருமணம் செய்துள்ளதாக தெரிவித்தார். துர்கா மைனர் என்பதால் அவரது திருமணம் சட்டப்படி செல்லாது என்பதாலும் தர்மலிங்கத்தை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்