திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவெறும்பூர் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த கிராம கமிட்டியினர் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பினர் சார்பில் தலைவர் சேகர் பாண்டுரார், செயலாளர் நிலவன் நாடார் ஆகியோர் தலைமையில் இன்று காலை மாவட்ட வருவாய் வட்டாட்சியர் பழனிகுமாரிடம் கூத்தைப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

 

திருச்சி திருவரம்பூர் கிராமத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு விழாவை வருகின்ற தமிழ் வருடம் தை மாதம் 6 ஆம் தேதி 19-01-2022 புதன்கிழமை அன்று சிவன் கோவில் பொது மந்தை இடத்தில் நடத்துவது என கிராம கமிட்டியினர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே இந்த விழாவினை தமிழக அரசு விதிமுறைகள் படியும் மற்றும் உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் படியும் முறையான அனுமதியுடன் மிகவும் அரசுக்கு ஒத்துழைப்புடனும் நடத்துவோம் என்று உறுதி அளிக்கின்றோம் ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்கள் கூத்தைப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு முழு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என திருவெறும்பூர் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்த கிராம கமிட்டியினர் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *