டெல்லியில் பெண் காவலர் சபியா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் திருச்சி மாவட்ட தலைவர் குலாம்ரசூல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு டெல்லியில் பெண் காவலர் சபியா சமூக விரோதிகளால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரின் உடலில் கத்தியால் 50 இடங்களில் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும்,

இந்த வன்கொடுமை கண்டித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக கோரியும் சபியா கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *