கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும்,ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடைவிதித்திருந்தது.

இந்த உத்தரவை திரும்ப பெற‌ வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் வாசலில் 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து தேங்காய் உடைத்து,சூடம் ஏற்றி நூதன போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சந்துரு தலைமை தாங்கி தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *