அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவிக்க விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம் மற்றும் கு.ப.கிருஷணன் ஆகியோருக்கு திருச்சியில் மாநகர் மாவட்ட அதிமுகவினர் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேட்டி எடுக்க காத்திருந்த செய்தியாளர்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பினார். அந்த கேள்வியில் ஓபிஎஸ் உடன்‌ கைகோர்க்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு. தனியாக பேசிக்கலாம் என்று நிருபர்களை பார்த்து பதிலளித்து விட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *