75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பேரணி

மாநில பொதுச்செயலாளரும், திருச்சி பெருங்கோட்ட  பொறுப்பாளருமான கௌதம் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ்சிவா கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

முன்னதாக தேசிய கொடியின் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். பேரணி மாவட்ட ஆட்சி அலுவலகம் சாலையில் உள்ள மேஜர் சரவணன் நினைவிடத்தில் இருந்து துவங்கி பெரிய மிளகு பாறை, மத்திய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம் நீதிமன்றம் அரசு மருத்துவமனை, வரகனேரி, மார்க்கெட் பெரிய கடை வீதி வழியாக சென்று சத்திரம் பேருந்து நிலையம் காமராஜர் சிலை சென்று நிறைவடைந்தது.

இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிகுமார், இளைஞரணி மாநில நிர்வாகிகள் ஸ்ரீராம், சிவகுமார் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *