தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் ஆன்லைன் கல்வி நடத்துவதற்கான அனுமதி அளித்தது. மேலும், தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

எனவே உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட கல்வி அலுவலகத்தில் இந்திய மாணவர் அமைப்பின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *