தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தஞ்சை மாவட்டத்தில்ஆய்வுக்கூடங்களில் பங்கேற்பதற்காக விமானம் மூலம்திருச்சி வந்தார்.

அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் 1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 45 ஆயிரம் அளவிற்கு மருந்துகள் கேட்கப்பட்டுள்ளது, மத்திய அரசிலிருந்து 11,796 மருந்துகள் மட்டுமே வந்துள்ளது. 4366 மருந்துகள் கையிருப்பில் உள்ளது.இதுவரையிலும் 77பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தடுப்பூசிகள் வரவர உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது, நேற்று வரை ஒரு கோடியே 10லட்சம் வந்துள்ளது. நேற்று இரவுடன் ஒரு கோடியே 5லட்சம் போடப்பட்டுள்ளது, 6லட்சத்து 16ஆயிரம் மருந்துகள் தடுப்பூசிகள் வந்துள்ளது, இதனை பிரித்து அனைத்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு, மூன்று நாட்கள் பயன்பாட்டில் இருக்கும். அட்டவணைப்படி ஜூன் மாதத்திற்கான 42 லட்சத்தை தடுப்பூசி மருந்தினை பிரித்துக் கொடுத்து அனுப்புகின்றனர். இனிமேல் தடுப்பூசி கிடைப்பதில் தடை இருக்காது.இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவது அவசியம் இருக்காது, நாங்கள் ஆய்வுக்கு செல்லும் மாவட்டங்களில் இறப்புகளை மறைக்கக் கூடாது என ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தி வருகிறோம். இறப்பு காரணத்திற்கான மாறுபாடுகள் இருந்தாலும் இறப்பை குறிப்பிட்டு வருகிறோம்.நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர்கள் சாதாரணம் ஆகிவிடும் நிலையில், நுரையீரல் பாதிக்கப்பட்டு மற்றும் இணை நோய்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் ஏதேனும் காரணத்திற்காக இருக்கும் போது அவர்கள் கொரோனா தொற்று இல்லை என்றுதான் அர்த்தம். ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி இறப்பின் போது என்ன நோய் இருந்ததோ அதைதான் கூறுவார்கள். அந்த வகையில் எஸ்பிபி மற்றும் வசந்தகுமார் எம்பி ஆகியோர் நோய் தொற்றால் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறப்பின்போது அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்றார்.ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி என்பதை முதன்முதலில் தமிழக அரசு அறிவித்து அதன் பின்னர் மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களில் கணக்கெடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலனடைந்து வருகின்றனர்.தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது குறித்து மருத்துவமனை சென்று ஆய்வு நடத்தப்படும், சித்த மருத்துவம்,யோகா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவம் தமிழகத்தில் 69 இடங்களில் மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த அலையில் பயன்பெற்றுள்ளனர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடித்து வெளியேறும் போது அவர் பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *