திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இணைந்து இரண்டாம் தவணை நிவாரண உதவித் தொகையான 2000 ரூபாய் மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், . சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *