தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்களையும் திமுக கைப்பற்றியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் 22 வயதே ஆன இளம் வேட்பாளர் சுகன்யா போட்டியிட்டார். அதிமுக சார்பில் வினிதா களமிறக்கப்பட்டார். நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வினிதா 453 வாக்குகள் பெற்றிருந்தநிலையில், திமுக வேட்பாளர் சுகன்யா 454 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இது போன்ற வெற்றிகளின் மூலம் ஒரேயொரு வாக்கின் முக்கியத்துவத்தை வாக்காளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *