தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இன்று திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்டஆயுதப்படை மைதானத்தில் அசல்சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் (ஆண்களுக்குஉயரம் அளத்தல், மார்பளவு அளத்தல், உடற்தகுதி தேர்வு (ஆண்களுக்கு 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களுக்கான ஓட்ட தேர்வுகள் நடைபெற்றது.இத்தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக்குழுவின் தலைவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.மூர்த்தி, தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்