திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது திருச்சி கோணக் கரையில் நாய்கள் காப்பகம் உருவாக்கி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதாக மாநகராட்சியில் திட்டம் தீட்டி செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது ஆனால் நடைமுறை படுத்தியதாக தெரியவில்லை.எனவே திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் தெரு நாய்கள்மற்றும் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பன்றிகள் ஆகியவற்றை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சுரேஷ், செயலாளர் லெனின் ஆகியோர் தலைமையில் திருச்சி மாநகராட்சி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் நாய்களின் முகமூடியை அணிந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர் பொதுமக்களுடன் திரண்டு வந்து நடத்திய இந்த போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *