தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருச்சி மன்னார்புரம் பொறியாளர் அலுவலகம் முன்பு தலைவர் மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு 3%சதவீத அகல விலை படியை வழங்கிட வேண்டும், மின்வாரியம் பொது துறையாக நீடித்திட வேண்டும், முடக்கி வைக்கப்பட்ட விதவை, விவாகரத்து, ஊனமுற்றோர், குடும்ப ஓய்வூதியங்களை வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு ஏற்று நடத்திட வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் மேலாடையின்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *