தமிழ்நாடு புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14ஆம் பேராயர் தேர்தல் திருச்சி தூய திருத்துவ பேராலயத்தில் கடந்த 5,6,7, ஆகிய தேதிகளில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி ஜம்மு காஷ்மீர் மாநில தலைமை நீதிபதி ஓய்வு பால் வசந்தகுமார் நிர்வாகத்தின் கீழ் நடைபெற்றது.

இந்த தேர்தலில் டி இ எல் சி திருச்சபையின் புதிய பேராயராக கிறிஸ்டியன் சாம்ராஜ் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டிஇஎல்சி வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் ஜெயச்சந்திரன் பொருளாளர் காந்தி கொள்கை பரப்புச் செயலாளர் சுரேஷ்குமார் திருச்சபையின் ஆயர்பெருமக்கள் உறுப்பினர்கள் இயக்கத்தின் இணை செயலாளர்கள் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *